Actor Dileep Arrested in Actress Bhavana Case Reason Here? நடிகை Bhavana கடத்தல் வழக்கில் Arrested செய்யப்பட்டிருக்கிறார் மலையாள நடிகர் திலீப் . ஹீரோ திலீப் , வில்லன் ஆனது ஏன் என்ற தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன . கடந்த பிப்ரவரி மாதம் 17- ம் தேதி , கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது , பாவனா கடத்தப்பட்டார் . காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார் . அடுத்த சில நாட்களில் அந்த கார் டிரைவர் மார்ட்டின் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் . இந்நிலையில் , திடீர் திருப்பமாக , நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார் . இதுபற்றி போலீஸ் வட்டாரங்கள் கூறியது : திலீப் , அவர் முதல் மனைவி மஞ்சு வாரியர் , பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் செய்து வந்தனர் . திலீப் - காவ்யா மாதவன் ஜோடியை , கேரள சினிமாவில் சூப்பர் ஜோடி என வர்ணித்தனர் . படப்பிடிப்பில் இருவரும் அப்படி இப்படி இருப்பதை மஞ்சு வாரியரிடம் பாவனா போட்டுக்கொடுத்தாராம் . இதனால் திலீப்புக்கும் மஞ்சுவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது . இதன் காரணமாக பாவனா மீது திலீப்புக்கு கோபம் . பின்னர் , மஞ்சு வாரி...